செய்திகள்

மயிலாப்பூரில் தம்பதிகள் கொலை. குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் வசித்த வந்த தம்பதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை, குற்றம் நடந்து 6 மணி நேரத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓங்கோலில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தம்பதிகள் – ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா – அவர்களுடைய மகளுடன் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்துவிட்டனர்; அவர்கள் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து நீணடகாலமாக அவர்களது வீட்டில் பணியற்றிவரும் வீட்டு உதவியாளர் மற்றும் நேபாள டிரைவரால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகள் அமெரிக்காவிலிருந்து அவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டனரா என்று விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்களுடைய தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர் தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் ஜம்மி காம்ப்ளக்ஸ் மண்டலத்தில் ராயப்பேட்டை ஹை ரோட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது தம்பதிகள் வீட்டில் இல்லை. உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

வீட்டில் இருந்து விசாரணை தொடங்கியது. போலீசார் டிரைவரை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தம்பதியரின் வீட்டில் இருந்த பெட்டகம் மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் கண்டனர்.

டிரைவரின் அழைப்பு பதிவுகள் கண்காணிக்கப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரும் அவரது கூட்டாளியும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஓட்டுநரும் அவரது கூட்டாளியும் கனரக கருவியால் தம்பதியை தாக்கியுள்ளதால் தம்பதிகள் மரணமடைந்துள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து, இறந்தவர்களை காரில் ஏற்றி, மாமல்லபுரம் அருகே உள்ள பண்ணைக்கு வீட்டில் இறக்கி, சடலங்களை ஒரு குழியில் புதைத்து, பின்னர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

admin

Recent Posts

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

3 hours ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

3 hours ago

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

2 days ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

3 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

3 days ago

கர்நாடக இசைக் கச்சேரிகள்; தீம்: க்ஷேத்திரங்கள். மே 14 முதல்

இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…

3 days ago