சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
கடந்த ஏழு மாதமாக கொரோனா காரணமாக இவரது தொழில் அவ்வளவாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் தங்களுடைய தொழிலை ஆரம்பித்துள்ளார். இப்போது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அனிதாவும் அவருடைய கணவரும் ஒரு புது ஐடியாவை செய்துள்ளனர். என்னவென்றால் டூமிங் குப்பம், சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் அவருக்கு தெரிந்த ஐந்து மகளிரை அழைத்து வந்து அலங்காரம் செய்தல் மற்றும் கைவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்கள் செய்வது பற்றியும் பயிற்சி கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஐந்து மகளிரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறிய அலங்காரப்பொருட்களை செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருவாய் கிடைக்கிறது. தற்போது அனிதாவும் பிசியாக உள்ளார். உங்களுக்கு இவர்களுடைய அலங்காரங்கள் வேண்டுமென்றால் அனிதாவை 98410 07676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…