சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
கடந்த ஏழு மாதமாக கொரோனா காரணமாக இவரது தொழில் அவ்வளவாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் தங்களுடைய தொழிலை ஆரம்பித்துள்ளார். இப்போது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அனிதாவும் அவருடைய கணவரும் ஒரு புது ஐடியாவை செய்துள்ளனர். என்னவென்றால் டூமிங் குப்பம், சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் அவருக்கு தெரிந்த ஐந்து மகளிரை அழைத்து வந்து அலங்காரம் செய்தல் மற்றும் கைவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்கள் செய்வது பற்றியும் பயிற்சி கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஐந்து மகளிரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறிய அலங்காரப்பொருட்களை செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருவாய் கிடைக்கிறது. தற்போது அனிதாவும் பிசியாக உள்ளார். உங்களுக்கு இவர்களுடைய அலங்காரங்கள் வேண்டுமென்றால் அனிதாவை 98410 07676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…