செய்திகள்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்!

‘உங்களுக்குள் பொங்கித் ததும்பும் அகிம்சைச் சக்தியின் மூலம் உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை சுயக்கட்டுப்பாடு, சுயச்சார்புடன் எவ்வாறு அமைதியாகத் தீர்த்துக் கொள்கிறீர்கள்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுதி, வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் கிடைக்குமாறு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்..

வயது வரம்பு: 10 முதல் 25 வயது வரை உள்ள மாணவர் அல்லது மாணவர் அல்லாதோர்.

கட்டுரையாளர் தமது பெயர், வயது, படிப்பு அல்லது பணி, தபால் முகவரி, செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் விபரங்களைத் தெளிவாகத் தரவேண்டும்.

சிறந்த நூறு கட்டுரையாளர்களுக்கு பரிசு நூல்ப்பெட்டி காந்தி நினைவு தினமான ஜனவரி 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்படும்.

கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி: செயலர், காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018. மின்னஞ்சல்: kulandhaisamy.gpf@gmail.com

admin

Recent Posts

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் நேச்சுரல் சலூன் திறப்பு.

ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…

11 hours ago

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

1 day ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

1 day ago

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

3 days ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

4 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

4 days ago