மயிலாப்பூர் திருவிழாவில் – உணவு, குழந்தைகளுக்கு, கோவில்கள் மற்றும் பாரம்பரிய வீடுகள் பற்றிய நான்கு நடை பயணங்கள் உள்ளது.

சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவின் 2023 பதிப்பிற்காக நான்கு நடை பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இலவசம் மற்றும் அனைவரும் வரலாம். முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜனவரி 7 சனிக்கிழமை, மாலை 4 மணி; உணவு நடைபயணம். தொடங்கும் இடம் – இந்தியன் வங்கி வாயில், வடக்கு மாட வீதி; நடை பயணம் புதிய சிற்றுண்டி கடைகளை நோக்கி இருக்கும். ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் நடைபெறுகிறது. இலவசம். நீங்கள் சாப்பிடுவதற்கு நீங்களே பணம் செலுத்தவேண்டும். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 7, சனிக்கிழமை, மாலை 4 மணி – குழந்தைகளுக்கு கோயில்கள் பற்றிய ஆய்வுகள் – பிரதீப் சக்கரவர்த்தி தலைமையில். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளே. நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும். குழந்தைகள் எழுதுவதற்கு , காகிதத் தாள்கள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பதிவு தேவையில்லை. இலவசம். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7 மணி – மயிலாப்பூரின் மூன்று கோவில்கள். டாக்டர் சித்ரா மாதவன் தலைமையில். தொடங்கும் இடம் – ஸ்பேஸ் ஆப். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றை இந்த நடைபயணம் உள்ளடக்கியது. பதிவு தேவையில்லை. இலவசம். நேரம்: 90 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7.30 மணி – மயிலாப்பூரின் கிளாசிக் பழைய வீடுகள். ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. தொடக்க இடம் – அம்பிகா அப்பளம் கடை, வடக்கு மாட வீதி, மயிலாப்பூர். இலவசம். பதிவு தேவை இல்லை. நேரம்: 75 நிமிடங்கள்

அனைத்து நிகழ்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு www.mylaporefestival.in இணையதளத்திற்கு செல்லவும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 days ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

6 days ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

2 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

2 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

4 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

4 weeks ago