செய்திகள்

மயிலாப்பூர் திருவிழாவில் – உணவு, குழந்தைகளுக்கு, கோவில்கள் மற்றும் பாரம்பரிய வீடுகள் பற்றிய நான்கு நடை பயணங்கள் உள்ளது.

சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவின் 2023 பதிப்பிற்காக நான்கு நடை பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இலவசம் மற்றும் அனைவரும் வரலாம். முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜனவரி 7 சனிக்கிழமை, மாலை 4 மணி; உணவு நடைபயணம். தொடங்கும் இடம் – இந்தியன் வங்கி வாயில், வடக்கு மாட வீதி; நடை பயணம் புதிய சிற்றுண்டி கடைகளை நோக்கி இருக்கும். ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் நடைபெறுகிறது. இலவசம். நீங்கள் சாப்பிடுவதற்கு நீங்களே பணம் செலுத்தவேண்டும். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 7, சனிக்கிழமை, மாலை 4 மணி – குழந்தைகளுக்கு கோயில்கள் பற்றிய ஆய்வுகள் – பிரதீப் சக்கரவர்த்தி தலைமையில். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளே. நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும். குழந்தைகள் எழுதுவதற்கு , காகிதத் தாள்கள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பதிவு தேவையில்லை. இலவசம். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7 மணி – மயிலாப்பூரின் மூன்று கோவில்கள். டாக்டர் சித்ரா மாதவன் தலைமையில். தொடங்கும் இடம் – ஸ்பேஸ் ஆப். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றை இந்த நடைபயணம் உள்ளடக்கியது. பதிவு தேவையில்லை. இலவசம். நேரம்: 90 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7.30 மணி – மயிலாப்பூரின் கிளாசிக் பழைய வீடுகள். ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. தொடக்க இடம் – அம்பிகா அப்பளம் கடை, வடக்கு மாட வீதி, மயிலாப்பூர். இலவசம். பதிவு தேவை இல்லை. நேரம்: 75 நிமிடங்கள்

அனைத்து நிகழ்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு www.mylaporefestival.in இணையதளத்திற்கு செல்லவும்.

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

1 day ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

1 day ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

1 day ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

3 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

3 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

3 days ago