கொரோனா நேரத்தில் மருத்துவமனைகளில் சேவை செய்த தொண்டு நிறுவனம்

மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா நேரத்தில் இவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் நிறைய உதவிகளை செய்துள்ளனர்.

இவர்களின் சேவையை பாராட்டி இந்த குழுவுக்கு குழந்தைகள் சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் எஸ்.எழிலரசி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த குழு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு தினமும் உணவளித்து வந்தனர். மேலும் விஷ்வஜெயம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சேகர் விஸ்வநாதன், கடந்த வருடம் சுமார் ஒரு லட்சம் உண்வு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு விஷ்வஜெயம் பவுண்டேஷனை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 93800 22773.

 

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

4 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

4 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

4 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

4 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

1 month ago