மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா நேரத்தில் இவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் நிறைய உதவிகளை செய்துள்ளனர்.
இவர்களின் சேவையை பாராட்டி இந்த குழுவுக்கு குழந்தைகள் சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் எஸ்.எழிலரசி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த குழு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு தினமும் உணவளித்து வந்தனர். மேலும் விஷ்வஜெயம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சேகர் விஸ்வநாதன், கடந்த வருடம் சுமார் ஒரு லட்சம் உண்வு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு விஷ்வஜெயம் பவுண்டேஷனை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 93800 22773.
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…