ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த TANFED ஸ்டோரில் எண்ணெய்கள், தினை, தேன், மசாலா மற்றும் பல பொருட்கள் கிடைக்கிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (TANFED) சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு அங்காடியைத் திறந்தது.

இந்த விற்பனை நிலையம் திருச்செங்கோடு, கொல்லிமலை, ஈரோடு, பெருந்துறை மற்றும் மாநிலத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களில் இருந்து திரட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்கிறது.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய், எள், நிலக்கடலை எண்ணெய்கள், பல பிராண்டுகளில் இந்த கடையில் நுழையும் போது உங்கள் கண்களை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுளள்து.

மார்த்தாண்டம் தேன் இங்கு வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலம் என்கிறார் விற்பனையாளர். இதன் விலை 200 கிராம் 87 ரூபாய்.

தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 220 ரூபாயிலும், எள் எண்ணெய் விலை 380 ரூபாயிலும் தொடங்குகிறது.

சம்பா மிளகாய், சிவப்பு மிளகாய், இங்குள்ள மற்றொரு பிரபலமான தயாரிப்பு ஆகும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சில நறுமணப் பொருட்களின் கலவையில் கையால் செய்யப்பட்ட சோப்புகள் அலமாரிகளில் உள்ளன.

தினை, வரகு மற்றும் சாமை ஆகியவை கையிருப்பில் உள்ளது – அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசியும் கிடைக்கிறது.

பச்சைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு, பிரவுன் சுகர், பில்டர் காபி பவுடர் போன்றவை இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகின்றன என்கிறார் இந்தக் கடையின் பொறுப்பாளர்.

கொல்லிமலை மிளகு (250 கிராம் ரூ.150), ஜீரா, சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் நாட்டுப்புற வகைகளின் பல்வேறு மசாலா வகைகள் உள்ளன.

இந்த TANFED அங்காடி ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் வளாகத்தில் அமைந்துள்ளது. முகவரி எண் 181, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை. இங்கே தொலைபேசி எண்கள் இல்லை.

இந்த செய்தித்தாளில் எழுதக்கூடிய உங்கள் பகுதியில் உள்ள புதிய கடைகளைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். கடை பற்றிய குறிப்பை வாட்ஸ்அப் செய்யவும் – 8015005628

வி.சௌந்தரராணி

admin

Recent Posts

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

19 hours ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 week ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 week ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

3 weeks ago