மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் காலை 6.30 மணி அளவில் பக்தி இசை, ஸ்ரீராம பஜனம் மற்றும் ஆச்சாரியர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.
எல்டாம்ஸ் சாலை வளாகத்தில் தி குரோவ் பள்ளியில், ராமர் மற்றும் சீதையின் உருவங்களைச் சுற்றி மாணவர்களின் இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் மாதவன் நிவாஸ் கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடினர். அயோத்தி கோயிலின் குடமுழக்கின் போது நேரலை காட்சியை கண்டு களித்து ஒன்று கூடி ராமருக்கு பூஜை பஜனைகள் செய்து ஸ்ரீ ராமபிரான் வருகையை சிறப்பித்தனர். மேலும் பள்ளி குழந்தைகளும் சுற்றியுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வந்தவர்களுக்கு தயிர் சாதம் , புளியோதரை போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆர் ஏ புரத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காலை 6.30 மணியளவில் அபிஷேகம் தொடங்கி வேதபாராயணம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓதப்பட்டது.
ஆர் ஏ புரம் பக்த ஜன சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாலையில், லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில், அறிஞர் டாக்டர் சுதா சேஷய்யன் உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து பாடகர் பால்காட் ராம்பிரசாத்தின் பாரம்பரிய இசைக் கச்சேரி நடந்தது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…
மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…
நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…
இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…
மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…