ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.

மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று ஜனவரி 22ல் அயோத்தியில் நடந்த புதிதாகக் கட்டப்பட்ட ஸ்ரீராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டையைக் கொண்டாட மந்தவெளியில் உள்ள சுவாமி ஞானானந்த பஜனை மண்டலியின் உறுப்பினர்கள் விடியற்காலையில் பஜனையை தொடங்கினர்.

மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் காலை 6.30 மணி அளவில் பக்தி இசை, ஸ்ரீராம பஜனம் மற்றும் ஆச்சாரியர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.

எல்டாம்ஸ் சாலை வளாகத்தில் தி குரோவ் பள்ளியில், ராமர் மற்றும் சீதையின் உருவங்களைச் சுற்றி மாணவர்களின் இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் மாதவன் நிவாஸ் கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடினர். அயோத்தி கோயிலின் குடமுழக்கின் போது நேரலை காட்சியை கண்டு களித்து ஒன்று கூடி ராமருக்கு பூஜை பஜனைகள் செய்து ஸ்ரீ ராமபிரான் வருகையை சிறப்பித்தனர். மேலும் பள்ளி குழந்தைகளும் சுற்றியுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வந்தவர்களுக்கு தயிர் சாதம் , புளியோதரை போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஆர் ஏ புரத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காலை 6.30 மணியளவில் அபிஷேகம் தொடங்கி வேதபாராயணம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓதப்பட்டது.

ஆர் ஏ புரம் பக்த ஜன சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாலையில், லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில், அறிஞர் டாக்டர் சுதா சேஷய்யன் உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து பாடகர் பால்காட் ராம்பிரசாத்தின் பாரம்பரிய இசைக் கச்சேரி நடந்தது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago