இந்த வருடம் கொரோனா காரணமாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தாமதமாக தொடங்கி உள்ளது. மயிலாப்பூரிலுள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சில்ட்ரன்ஸ் கார்டன் மற்றும் இராணி மெய்யம்மை பள்ளிகளை சேர்ந்த பன்னிரெண்டு மாணவர்களுக்கு எழுபத்தி ஏழாயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டுள்ளனர்.
நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நிதிஉதவி அளிக்க விரும்பினால் பொதுமக்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலக மேனேஜர் சாந்தியை 2498 2244 / 24671122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் அளிக்கும் நிதிஉதவிக்கு வரிவிலக்கு உண்டு. ரசீது வழங்கப்படும். நீங்கள் நேரிடையாக ஆன்லைன் வழியாகவும் பணத்தை செலுத்தலாம். இந்த உதவி தொகை பொதுமக்கள் வழங்கும் நிதியிலிருந்தும் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…