மத நிகழ்வுகள்

புனித நாளில் சேவையாற்றும் சில தேவாலயங்கள்

இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை நிறைய பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திறந்த வெளியிலும் சில பேராலயங்களில் தேவாலயத்தின் உள்ளேயும் நடைபெற்றது. நேற்றைய தினம் ‘மாண்டி வியாழன்’ கொண்டாடப்பட்டது. நாளைய மறுநாள் அனைத்து பேராலயங்களிலும் ஈஸ்டர் சண்டே தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த மாதம் பேராலய பாதிரியார்கள் கிறிஸ்தவ மக்களை தொண்டு செய்யுமாறு அறிவுறுத்துவர். அந்த வகையில் நேற்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா பேராலயத்தில், மக்கள் கடந்த நாற்பது நாட்களாக தொண்டு செய்வதற்காக வீட்டில் தினமும் குறைந்தளவு சேமிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை பேராலயத்தில் கொண்டு வந்து தொண்டு செய்வதற்காக பாதிரியர்களிடம் வழங்கினர். இந்த உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.

 

admin

Recent Posts

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

14 hours ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

15 hours ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

1 day ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

1 day ago

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

3 days ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

3 days ago