அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை தூர்வாரும் திட்டம் நிறுத்தம்.

அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு விரிவான ஆய்வை மேற்கொண்டு, சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட மண் அகற்றும் திட்ட பணிகளை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்தத் திட்டமானது, களிமண் படுக்கையை அகற்றி, ஒரு உயிர் சவ்வுத் தாளைப் போட்டு, மீண்டும் ஒருமுறை களிமண்ணால் நிரப்புவது. இதற்கான பொருட்கள் டெல்லியில் மட்டுமே கிடைக்கின்றன, மேலும் இதன் விலை ரூ. 1 கோடி.

கோவில் செயல் அலுவலர் டி காவேரி மயிலாப்பூர் டைம்ஸிடம், தை மாத தெப்போற்சவத்திற்குப் பிறகு தூர்வாரும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் (குளத்தை சுற்றியுள்ள நந்தவனத்தைப் பராமரிப்பவர்) பல ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தில் முதல் முறையாக நீர்மட்டம் உயர்ந்திருப்பதை பார்ப்பதாகவும், இந்த அளவு எதிர்காலத்தில் எப்போதுமே குறையாது என்றும் கூறுகிறார். மேலும் நிபுணர்களுடனான பயிற்சிக்கு செல்லும் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்.

பருவமழையை முன்னிட்டு, குளத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக நீர்மட்டம் குறையவில்லை.

செயல் அலுவலர் டி காவேரி, நீர்மட்டம் குறைந்தவுடன், கோடை காலத்தில் குளம் வறண்டு போனால், மீண்டும் ஒரு சுற்று சுத்தம் செய்து களி மண்ணை நிரப்பலாம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகளுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று கூறினார்.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago