ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில், தேவாலயத்தில் பூசைகள் முடிந்த பிறகு மாதா சிலை மற்றும் இதர சிலைகளுடன் தேவாலயம் சுற்றியுள்ள தெருக்களில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேர் பவனி நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் கோவிட் நேர விதிமுறைகளின் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே திருவிழா நடைபெறவுள்ளது. ஜனவரி 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூசையும் அதை தொடர்ந்து தேர் பவனி தெருக்களில் சாதாரணமாக நடைபெறும். இந்த தேர் தெருக்களில் எங்கும் நிற்காமல் செல்லும். அடுத்த நாள் 20ம் தேதி ஒரு சிறப்பு பூசை நடைபெற்ற பிறகு தேர் பவனி நடைபெறும். பாதிரியார் மேற்கண்ட அட்டவணைப்படியே விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…