சென்னை மெட்ரோ: டிசம்பர் 10 முதல் கச்சேரி சாலை பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 10 சனிக்கிழமை முதல் கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை செயல்படுத்துகிறது. இது ஒரு வாரம் சோதனை அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16 வரை.

மிக முக்கியமாக, கார்கள், பேருந்துகள் மற்றும் வேன்கள் லஸ் சர்க்கிள் முனையிலிருந்து சாந்தோம் கதீட்ரல் முனை வரை வழக்கம்போல் செல்லமுடியாது.

இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் விவரங்கள்:

1. முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கல்விவாரு தெருவில் தற்போதுள்ள ஒருவழிப்பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது; கச்சேரி சாலையில் இருந்து முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

2. லஸ் ஜங்ஷனிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞசாலைக்கு செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கல்விவாரு தெரு, முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு மற்றும் பஜார் சாலையில் திருப்பி விடப்படும்.

3. சாந்தோமில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் நோக்கி செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டு தேவடி தெரு, நடுத்தெரு, ஆர் கே மட சாலை (அல்லது) மாதா சர்ச் சாலை மற்றும் ஆர் கே மட சாலையில் திருப்பி விடப்படுகின்றன.

4. சென்னை மாநகர பேருந்து எண். 12Bயின் இயக்கம் – லஸ்ஸிலிருந்து பட்டினப்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கச்சேரி சாலை வழியாக தடைசெய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர். ஆர்.கே.சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுகிறது.

5. MTC பேருந்து 12X இயக்கம் – லஸ்ஸிலிருந்து பட்டினப்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கச்சேரி சாலை வழியாக தடைசெய்யப்பட்டு ஆர்.கே.மட ரோடு மற்றும் சவுத் கெனால் பேங்க் ரோட்டில் திருப்பி விடப்பட்டு, திரும்பும் வழியில் மந்தைவெளி பேருந்து நிலையம் வரை, வழக்கம் போல் இயங்கி வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர் கே மட சாலை வழியாக செல்லும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago