ஆர்.ஏ.புரத்திலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு மைதானத்தின் பெரும்பகுதியை மெட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது. இங்கு சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் முகப்பில் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் தற்போது அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்னும் பணிகள் துரிதமாக செயல்பாட்டுக்கு வரும் போது மேலும் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரிக்கும். இந்த மெட்ரோ வழித்தடம் வடசென்னையில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் வேலைகளுக்கு சுரங்கம் தோண்டும் பணி மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…