மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட காதுகேளாதோருக்கான பள்ளியின் பொன்விழா

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இந்த வருடம் விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போதும் சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்க்காக பள்ளி நிர்வாகம் சில திட்டங்கள் வகுத்திருந்தனர். பள்ளியிலுள்ள ஆடியோலஜி ஆய்வகத்தை மேம்படுத்துதல் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியில் குழந்தைகளின் இசை மற்றும் நடன திறன்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சி நடத்துதல், மேலும் இந்த பள்ளியில் படித்து வாழ்க்கையில் ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கிய அனைத்து பழைய மாணவர்களையும் மேடையில் கொண்டு வந்து உரை நிகழ்த்துதல் போன்ற திட்டங்களை வகுத்திருந்தனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் சுமார் 25 பேர், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பெரும்பாலும் காதுகேளாதவர்கள் மற்றும் கண் பார்வை இல்லாதோர் என்பதால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது மிகவும் சிரமம். கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு சுமார் 120 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இது தவிர கிளார்க் பள்ளி தற்போது தங்களுடைய இரண்டாவது பயிற்சி பள்ளியை கேளம்பாக்கத்தில் நிறுவியுள்ளது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago