மத நிகழ்வுகள்

கொரோனா கட்டுப்பாடுகளால் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழா பாதிப்பு

கொரோனா தொற்று இப்போது மறுபடியும் வேகமாக பரவி வருவதால் அரசு சில விதிமுறைகளை கண்டிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க ஆணையிட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள் மற்றும் பேராலயங்களில் இரவு எட்டு மணிக்கு மேல் எவ்வித நிகழ்வுகளும் நடத்த கூடாது. இது தவிர வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்கனெவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போது அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப விழாவில் மாற்றங்களை செய்துள்ளனர். சனிக்கிழமை மாலை நடைபெற வேண்டிய கருட சேவை இப்போது வெள்ளிக்கிழமை மாலையே நடைபெறவுள்ளது. இதற்குப்பின் பிரம்மோற்சவ விழாவின் அனைத்து ஊர்வலமும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று தேவாலயங்களிலும் இரவு எட்டுமணிக்கு மேல் எவ்வித பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லஸ் அருகே உள்ள தேவாலயத்தில்
ஞாயிற்றுக்கிழமை அனைத்து பூசைகளும் இரவு ஏழு மணிக்குள்ளேயே முடிக்கப்படும் என்றும், ஏழு மணிக்கு மேல் மக்கள் வெளியில் எங்கும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவர் என்று பாதிரியார் பீட்டர் தூமா தெரிவிக்கிறார்.

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தேவாலயங்களில் நடைபெறும் பூசைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. ஆனால் கோவில்களில் பூசைகள் செய்வதில் சில பாதிப்புகள் உள்ளது.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

4 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

5 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

5 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago