மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம்.
சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மற்றும் ஆந்திர மகிள சபாவில் தடுப்பூசி வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு விசாரித்த போது, இந்த இரண்டு இடங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், வாக்குப்பதிவு நாளை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் அதிகளவு வந்ததாக தெரிவித்தனர். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 150 நபர்கள் வருவதாகவும், சில நாட்களில் 200 நபர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சாந்தோம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், ஆனால் இங்கேயும் அதிகமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏதாவது ஒருநாள் மக்கள் குறைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தால் அன்று மீதமுள்ள தடுப்பூசிகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எடுத்து சென்று பயன்படுத்தப்படும். ஆகவே தடுப்பூசி எங்கேயும் எப்போதும் வீணாவதில்லை என்று தெரிவிக்கின்றனர். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு காலை 9.30 மணியளவில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…