மயிலாப்பூர் பகுதிக்கு புதிய துணை கமிஷனர் திஷா மித்தல்

மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ளது. இவர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டில் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 2011ல் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த உடனேயே அவரிடம் பெரிய வழக்கு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கு பற்றி தமிழ்நாடே பேசியது. சென்னை உயர்நீதி மன்றமும் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியின் முதல்வர் அங்கு படிக்க வந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது சம்பந்தமானது. இதை விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு குழுவில் திஷா மிட்டல் சிறப்பாக பணியாற்றி ஐந்து மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். ஐந்து வருடங்கள் தொடர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மயிலாப்பூர் புதிய துணை கமிஷனர் அலுவலக தொலைபேசி எண்: 2345 2553 / 2498 2797

<< Photo courtesy daily thanthi >>

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago