செய்திகள்

மயிலாப்பூர் பகுதிக்கு புதிய துணை கமிஷனர் திஷா மித்தல்

மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ளது. இவர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டில் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 2011ல் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த உடனேயே அவரிடம் பெரிய வழக்கு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கு பற்றி தமிழ்நாடே பேசியது. சென்னை உயர்நீதி மன்றமும் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியின் முதல்வர் அங்கு படிக்க வந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது சம்பந்தமானது. இதை விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு குழுவில் திஷா மிட்டல் சிறப்பாக பணியாற்றி ஐந்து மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். ஐந்து வருடங்கள் தொடர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மயிலாப்பூர் புதிய துணை கமிஷனர் அலுவலக தொலைபேசி எண்: 2345 2553 / 2498 2797

<< Photo courtesy daily thanthi >>

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

20 hours ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

21 hours ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

21 hours ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

3 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

3 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

3 days ago