பொது இடங்களில் புத்தாண்டுக் கூட்டங்கள் நடத்துவதற்கு நகரக் காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கலாம். ஆனால், டிசம்பர் 31 இரவின் பிற்பகுதியில் மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே உள்ள, ஒளியூட்டப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட பி.ஓர் அன்ட் சன்ஸ் மணிக்கூண்டிற்கு அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கடிகாரம் பன்னிரெண்டு மணியை நெருங்கியபோது, கூட்டத்திலிருந்து ஆரவாரம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, கூட்டம் கலைந்து சென்றது, பின்னர் சாலையை கிளியர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
முன்னதாக, மெரினாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கடற்கரைக்குள் செல்ல முற்பட்டவர்களை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். கடற்கரை ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தது. மெரினா லூப் சாலையில் கார்கள் மற்றும் பைக்குகள் அனுமதிக்கப்படவில்லை.
புகைப்படம: மதன் குமார்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…