மெரினா கடற்கரையில் செயல்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது

சில மாதங்களாக மெரினா கடற்கரையை சிறப்பாக எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாநகராட்சியிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். நீதிபதிகள் இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த இந்த வழக்கில் முதலாவதாக மெரினாவை குப்பைகளின்றி எவ்வாறு அழகாக நிர்வகிப்பது, இரண்டாவது கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்துவரும் கடைகளுக்கு உரிமம் வழங்கி எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, மூன்றவதாக மெரினா லூப் சாலையில் (கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை) உள்ள மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு புதியதாக மீன் அங்காடி அமைத்து அங்காடியில் மட்டும் மீன் வியாபாரம் செய்ய அனுமதிப்பது, கடைசியாக பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட்நகர் வரை புதிய லிங்க் சாலை (அடையாறு ஆற்றின் மேலே புதியதாக ஒரு பாலம்) அமைப்பது தொடர்பாகவும் விவாதம் நடைபெற்று வந்தது.

தற்போது வரை இந்த வழக்கு சென்னை மாநகராட்சி மெரினாவில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரியான வகையில் தள்ளுவண்டிகள், மற்றும் உரிமம் வழங்குவது மற்றும் அடையாறு ஆற்றின் மேலே புதியதாக பாலம் அமைப்பது, இதற்கு சென்னை மாநகராட்சி இரண்டு திட்டங்களை வகுத்துள்ளனர். முதல் திட்டம் – இந்த பாலத்தில் சைக்கிள், கார், வேண் போன்ற வாகனங்களை அனுமதித்தல் இதன் செலவு மதிப்பு சுமார் 410 கோடி ரூபாய் – இரண்டாவது திட்டம், மக்கள் பாலத்தில் நடந்து மற்றும் சைக்கிளில் செல்லும் வகையில் சிறியதாக பாலம் அமைத்தல் இதற்கு ஆகும் செலவு சுமார் 230 கோடி ரூபாய் ஆகும் என்று நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். ஆனால் நீதிபதிகள் சிறிய பாலம் அமைப்பது தேவையில்லை என்றும், அதே நேரத்தில் அடையாறு ஆற்றின் மேலே பெரிய பாலம் அமைத்தால், ஆர்.ஏ. புரத்தில் மற்றும் தற்போதுள்ள அடையாறு பாலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago