மகாசிவராத்திரி: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறும் நேரங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு நான்கு முக்கிய பூஜைகள் நடைபெற உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை, இங்கு பக்தர்கள் கூட்டம் சீராக இருந்தது.

நான்கு கால பூஜைகள், இரவு 11.30 மணி, பின்னிரவு 2 மணி, 3 மணி மற்றும் காலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு கால பூஜையும் தீபாராதனையுடன் முடிவடையும்.

மார்ச் 8ஆம் தேதி, கோயில் காலை திறக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை சுமார் 4 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும் வரை இரவும் பகலும் இடைவேளையின்றி கோவில் திறந்திருக்கும்.

இந்து சமய அறநிலையத்துறையானது மயிலாப்பூரில் உள்ள பி.எஸ் உயர்நிலைப் பள்ளியின் மைதானத்தில் மத-கலாச்சார நிகழ்வுகளையும் நடத்துகிறது. நாடகம், நடனங்கள் மற்றும் கச்சேரிகள் இரவு மற்றும் விடியற்காலை வரை வரிசையாக நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மற்ற சிவன் கோயில்களிலும் இதேபோன்ற பூஜைகள் திட்டமிடப்பட்டுள்ளன. டாக்டர் ஆர்.கே.சாலைக்கு வடக்கே உள்ள ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ வெள்ளீஸ்வரர், ஸ்ரீ காரணீஸ்வரர், ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில், ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் மற்றும் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் ஆகியவை இதில் அடங்கும்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள சப்த சிவன் கோவில்கள் பற்றிய காணொளியைப் இங்கு பாருங்கள் –

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago