மத நிகழ்வுகள்

மகாசிவராத்திரி: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறும் நேரங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு நான்கு முக்கிய பூஜைகள் நடைபெற உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை, இங்கு பக்தர்கள் கூட்டம் சீராக இருந்தது.

நான்கு கால பூஜைகள், இரவு 11.30 மணி, பின்னிரவு 2 மணி, 3 மணி மற்றும் காலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு கால பூஜையும் தீபாராதனையுடன் முடிவடையும்.

மார்ச் 8ஆம் தேதி, கோயில் காலை திறக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை சுமார் 4 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும் வரை இரவும் பகலும் இடைவேளையின்றி கோவில் திறந்திருக்கும்.

இந்து சமய அறநிலையத்துறையானது மயிலாப்பூரில் உள்ள பி.எஸ் உயர்நிலைப் பள்ளியின் மைதானத்தில் மத-கலாச்சார நிகழ்வுகளையும் நடத்துகிறது. நாடகம், நடனங்கள் மற்றும் கச்சேரிகள் இரவு மற்றும் விடியற்காலை வரை வரிசையாக நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மற்ற சிவன் கோயில்களிலும் இதேபோன்ற பூஜைகள் திட்டமிடப்பட்டுள்ளன. டாக்டர் ஆர்.கே.சாலைக்கு வடக்கே உள்ள ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ வெள்ளீஸ்வரர், ஸ்ரீ காரணீஸ்வரர், ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில், ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் மற்றும் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் ஆகியவை இதில் அடங்கும்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள சப்த சிவன் கோவில்கள் பற்றிய காணொளியைப் இங்கு பாருங்கள் –

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மே 14ல் துவங்குகிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…

23 hours ago

இளம் தாய்மார்களுக்கான நடன இயக்கப் பயிற்சி பட்டறை. மே 12

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…

1 day ago

+2 தேர்வு முடிவுகள்: சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஸ்கூல் டாப்பர்ஸ்.

மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…

1 day ago

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

3 days ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

3 days ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

3 days ago