செய்திகள்

ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை கார்ப்பரேஷனின் அல்போன்சோ விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நிறைய பேர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் விளையாடுவார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கு பேட்மிண்டன் விளையாட்டுக்காக ஒரு இண்டோர் மைதானம் கட்டப்பட்டது.

தற்போது இங்கு மற்றுமொரு டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் இரண்டு தமிழக அமைச்சர்களால் திறக்கப்படவுள்ளது. இது மாடர்ன் வசதிகளுடனும் அலங்கார விளக்குகளுடனும் மற்றும் ஒரு கேலரியுடனும் அமைந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் மாநில அரசிடமிருந்து நிதி பெற்று இந்த புதிய டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் கட்டுவதற்கு உதவிபுரிந்துள்ளார்.

அடையாறில் வசிக்கும் முன்னாள் இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ராஜேஷ் முன்னின்று, சட்டமன்ற உறுப்பினர் மூலமாக இந்த இண்டோர் மைதானம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் திறந்த பிறகு இதில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் இதர கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்படும்.

மைதானம் திறந்த பிறகு பொதுமக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

2 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

3 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

3 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago