ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட் மூலம் இந்த தேர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
அலங்கரிக்கப்பட்ட ஒன்பது தேர்கள் பேராலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்தது. அவ்வாறு ஊர்வலம் வரும் போது சில இடங்களில் வழக்கமாக தேர்கள் நின்று செல்லும். இந்த வருடம் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேர் திருவிழாவின் போது மாதாவை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் சோபியா பீட்டர் அவரது வீட்டில் மாதாவை வரவேற்கும் விதமாக வீட்டின் கதவருகே மாதா சிலையை வைத்து அலங்கரித்து அங்கிருந்து தெரு வரைக்கும் ரங்கோலி கோலம் போட்டிருந்தார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…