கடந்த பிப்ரவரி 2ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க அரசிடம் வலியுறுத்தி நிதி பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ஆர்.ராஜேஷ் முன்னின்று இந்த ஸ்டேடியம் அமைய பல்வேறு வகைகளில் உதவிபுரிந்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்டேடியத்தை பொது மக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…