சுகாதாரம்

கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை இந்த கிளினிக்கில் எவ்வித குழப்பமும் இல்லாமல் அமைதியாக மக்களுக்கு தடுப்பூசிகள் முதல் சுற்று மற்றும் சிலருக்கு இரண்டாம் சுற்று போடப்பட்டது. இது மக்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் தொடர்பு இடைவெளி இருப்பதை காட்டுகிறது.

கொஞ்ச நாட்களாக காலையில் சுகாதார ஊழியர்கள் கிளினிக்குகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் வாங்கியவர்களுக்கு தடுப்பூசி கிளினிக்குகளுக்கு வந்தவுடன் வரிசையாக வழங்குவர். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அதிக நேரம் மூத்த குடிமக்கள் கிளினிக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் காலை உணவை வீட்டிலிருந்து எடுத்துவருகின்றனர் சிலர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டவுடன் மீண்டும் கிளினிக்கிற்கு வரவேண்டியுள்ளது. இரண்டாவது பிரச்சனை இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் எத்தனை தடுப்பூசிகள் மையத்திற்கு வரும் என்ற விவரம் தெரிவதில்லை, ஆனால் தோராயமாக டோக்கன் வழங்குகின்றனர். இதனால் சில சமயங்களில் டோக்கன் அதிகமாக வழங்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது.

.மேலும் இங்கு சரியான அறிவிப்பு பலகைகள் இல்லை. அதேபோல தடுப்பூசி இரண்டாவது சுற்று போட வருபவர்கள் ஏற்கனெவே எந்த வகை தடுப்பூசி போட்டுக்கொண்டனரோ அதே வகை தடுப்பூசியைத்தான் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த செய்தி பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அங்கு தடுப்பூசி இருப்பு உள்ளதா என்ற விவரமும் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும்போது மட்டுமே தெரியவருகிறது, இதனாலும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் ஒவ்வொருநாளும் பல கிளினிக்குகளில் ஏற்படுகிறது. இதனால் சில நாள் கிளினிக்குகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில நாள் கூட்டமில்லாமல் காணப்படுகிறது.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

14 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

2 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

4 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago