Categories: ருசி

மெதுவாக இயங்கி வரும் பிரபலமான உணவகமான மாமி டிபன் ஸ்டால்.

மயிலாப்பூரில் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள பிரபலமான உணவகம் மாமி டிபன் ஸ்டால் ஊரடங்கின் போது வியாபாரம் வெகுவாகக் குறைந்தது.

கடந்த 12 மாதங்களில், மாமி டிபன் ஸ்டால் முந்தைய கோவிட் நேரங்களுடன் ஒப்பிடும்போது ஐம்பது சதவீதமே இயங்கி வந்தது.

மயிலாப்பூர் டைம்ஸுடன் பேசிய கடையின் உரிமையாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காபி மற்றும் சமோசா மட்டுமே வேகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்.

இங்கு பாப்புலர் உணவான தோசை, போண்டா மற்றும் பஜ்ஜி கூட ஊரடங்கு காலத்தில் குறைந்தளவு விற்பனையே நடைபெறுகிறது.

விற்பனை மந்தநிலைக்கு மிகப்பெரிய காரணம் உள்ளூர் கோயில்கள் மூடப்பட்டதே என்று அவர் கூறுகிறார்.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் மக்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது, ​​இந்த கடையில் விற்பனை அதிகரித்து காணப்படும் என்றும், ஆனால் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் கோயில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 45 நாட்களில் வியாபாரத்தில் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டோம் என்று உரிமையாளர் கூறுகிறார்.

மூத்த குடிமக்கள் எங்கள் கடையின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அவர்கள் மாலை டிஃபின் மற்றும் காபிக்காக எங்கள் கடைக்கு வருவார்கள்.அதே நேரத்தில் இப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண காலங்களில், இந்த கோவில் வரும் பக்தர்கள் இந்த உணவகத்திற்கு வருவார்கள் அவ்வாறு வரும்போது இந்த பகுதியில் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் அது இப்போது குறைந்துவிட்டது.

இப்போது மாமி டிபன் ஸ்டாலில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்படுகிறது.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

8 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

1 day ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

5 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago