Categories: ருசி

மோசமான காலங்களில் வணிகத்தை மேம்படுத்தும் விதமாக, இந்த உணவகம் காய்கறிகள் மற்றும் இட்லி, தோசை மாவு போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.

இந்த கோவிட்-19 காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் ரெஸ்டாரெண்ட் தொழில். சிலர் தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் பெரிய பகுதியிலிருந்து சிறிய பகுதிக்கு இடம் மாறி விட்டனர். சிலர் கேட்டரிங் தொழில் செய்கின்றனர். இது போன்று நிறைய மாற்றங்கள் உணவகம் தொழிலில் ஏற்பட்டுள்ளது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மிகவும் பிரபலமான உணவகம் சங்கீதா ரெஸ்டாரண்ட். இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உணவகத்தை திறந்த போது கடையை ஒட்டி ஒரு சிறிய அளவிலான காய்கறி மற்றும் பழக் கடையை நடத்தி வந்தனர். தற்போது இந்த காய்கறி கடை விரிவுபடுத்தப்பட்டு காய்கறி, பழங்கள், இட்லி தோசை மாவுகள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதேபோன்று இவர்களுடைய ஊழியர்கள் கடையின் வாயிலருகே வந்து சாலையில் காரில் வருபவர்களுக்கு அவர்களது வாகனத்திற்கே உணவு மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை கொண்டு வந்து வழங்குகின்றனர். இந்த கொரோனா காலத்தில் சங்கீதா உணவகம் இதுபோன்ற சேவையை வழங்குகின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago