Categories: சமூகம்

சொந்த முயற்சியால் குப்பம் பகுதியில் கோவிட் பராமரிப்பு வேலையை செய்து வரும் தீபாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, கடலோர காலனியான பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த தீபாவும் கையெழுத்திட்டிருந்தார்.

இந்த மனிதவள பயிற்சி பெற்ற பட்டதாரி தனது இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் தனது குடும்ப தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்த சவாலான வேலையை செய்து சம்பாதிக்க விரும்பினார்.

இவருடைய பணி என்னவென்றால் வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையைப் பெற ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள் – இவர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் உழைத்தார், கடந்த ஆண்டின் முடிவில் இவரது ஒப்பந்தம் முடிவடைந்தது.

ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வைரஸின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியது, தீபா மீண்டும் ஒப்பந்த கோவிட் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவரது தொடர்ச்சியான களப்பணி மற்றும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக, இந்த வாரம் ஜி.சி.சி யின் உள்ளூர் அதிகாரிகள் பாராட்டினர். அவர்கள் தீபாவுக்கு ஒரு சிறப்பு டி-ஷர்ட் வழங்கினர். இந்த நிகழ்வில் பகுதி பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.

மக்கள் தடுப்பூசி போட மறுத்துவரும் சீனிவாசபுரத்தில் கடந்த வாரம், தீபாவும் அவரது குழுவும் சுமார் 50 பேரை தடுப்பூசி போட வைத்தனர். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

வார்டு 173-ல் (ஆர்.ஏ.புரம் – கே.வி.பி கார்டன்ஸ் – எம்.ஆர்.சி நகர் – சீனிவாசபுரம்) கணக்கெடுக்கும் இவரும் இவரது குழுவும் வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, சீக்கிரம் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தீபா கூறுகிறார்.

மே மாதத்தின் 39 டிகிரி வெப்பத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை செய்யும் இந்த வேலை எளிதான வேலை அல்ல.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago