அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு சிறிய சேவையைத் தொடங்கினார் – அவர் ஸ்னாக்ஸ்களை வீட்டில் தயாரித்து கிளினிக்கில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பினார்.
பின்னர் இந்த முயற்சியில் அவருடன் அவரது குடும்பத்தினரும் இணைந்து சேவை செய்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவியது மற்றும் இன்னும் சில குழுக்கள் தங்கள் பகுதிகளிலும் இதே போன்ற சேவையை செய்யத் தொடங்கினர்.
இப்போது, இந்த சேவை விரிவடைந்துள்ளது. சுமார் 12 ஜி.சி.சி கிளினிக்குகளின் ஊழியர்களுக்கு இந்த உணவு வழங்கும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எங்கள் முதல் ஸ்பான்சர்கள் மூலம், நாங்கள் தினசரி அடிப்படையில், சுமார் 40 பொட்டலங்கள் காலை உணவுகள், சுமார் 275 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் சுமார் 75 ஸ்னாக்ஸ் பொட்டலங்களை 12 ஜி.சி.சி நடத்தும் மையங்களுக்கு கடந்த ஒரு மாதமாக வழங்கிவருகிறோம் என்று வசுமதி கூறுகிறார்.
இன்னும் சில மாதங்களுக்கு இந்த சேவையை தொடர குழுக்களுக்கு அதிக ஸ்பான்சர்கள் தேவை என்று அவர் கூறுகிறார்.
நன்கொடையாளர்கள் தொடர்புக்கு :
– சி பி ராமசாமி சாலை, ஆர் கே நகர், மற்றும் சாந்தோமில் உள்ள பி.எச்.சிக்களுக்கு, மதிய உணவு வழங்குவதற்காக வசுமதி ரங்கராஜன் (9840015071) ஐ தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் தி.நகரில் ஜெரிகேர் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்காகவும் தொடர்புகொள்ளவும்.
– அடையார், கிண்டி மற்றும் ஆர்.ஏ.புரம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.சிகளுக்கு மதிய உணவை வழங்க வித்யா கிருஷ்ணாவை (9500002394) தொடர்பு கொள்ளவும்.
கே.பி.தாசன் சாலை மற்றும் மிர்சாஹிபேட்டையில் காலை உணவு / மதிய உணவிற்கு நிதியுதவி செய்ய சுதா ஸ்ரீதரன் (9884184140).
– காரப்பாக்கம், ஓ.எம்.ஆரில் மதிய உணவுக்கு சுகன்யா ரங்கராஜன் (9940052896) ஐ தொடர்பு கொள்ளவும்.
இந்த கோவிட் போர்வீரர்களுக்கு நல்ல தரமான மற்றும் போதுமான அளவு உணவை இந்த சேவையாளர்கள் வழங்குகிறார்கள் என்று வசுமதி கூறுகிறார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…