மத நிகழ்வுகள்

மயிலாப்பூர் கோவில்களின் ஸ்ரீபாதம் ‘மேஸ்திரி’அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து கோவில் திறப்பது சம்பந்தமாக தங்கள் வேண்டுகோளை முன்வைக்க முடிவு

கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் ஊர்வலங்கள் நடத்துவதை தொகுத்து வழங்குகிறார்.

இவர் கடந்த 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் கோயில்களில் ஸ்ரீபாதமாக பணியாற்றி வருகிறார். இவரது முன்னோர்களும் பல தலைமுறைகளாக மயிலாப்பூர் கோவில்களில் உள்ள கடவுள்களை தங்கள் தோள்களில் சுமந்து இந்த சேவையை செய்து வந்தவர்கள். பெரிய உற்சவங்களின் போது மயிலாப்பூர் கோயில்களில் ‘பந்தல்’ ஏற்பாடு செய்கிறார்.

கபாலீஸ்வரர் கோயில், மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், மாரி செட்டி வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் காரணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் 60 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஸ்ரீபாதமாக சேவை செய்கிறது.

தற்போதைய ஊரடங்கின் போது கபாலீஸ்வரர் கோயில் மட்டுமே கோவில் வளாகத்திற்குள்ளேயே ஊர்வலங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்த சேவையைச் செய்யும் மற்ற எல்லா கோவில்களும் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் உற்சவத்தை கூட நிறுத்திவிட்டதாகவும் சங்கர் இன்று காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் தெருவில் வீதி உலா வரும் அனைத்து ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

அனைத்து கோயில்களிலும் இருக்கும் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய பிரச்சனைகளை மாநில அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து தெரிவிக்க சங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஊர்வலங்கள் மீதான கட்டுப்பாடுகளின் விளைவாக ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய அவலநிலையை போக்க சில தளர்வுகளை அறிவிக்க வேண்டி வரும் புதன் கிழமை அமைச்சரை சந்திக்க உள்ளதாக மேஸ்திரி தெரிவிக்கிறார். கோவிலுக்குள் சாமி ஊர்வலங்களை நடத்த அனுமதி தரவேண்டும் என்றும் அதே நேரத்தில் குறைந்த அளவிலான பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், இதனால் எங்கள் சேவைகளுக்காக சில நிதியை பெறுவோம் என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாமி ஊர்வலங்கள் நிறுத்தப்பட்டதால் எங்களது பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதை நம்பியுள்ளதாக ஸ்ரீபாதம் குழுவின் மேஸ்திரி தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இது நிதி அவலநிலை மட்டுமல்ல, “நீங்கள் இந்த சேவையைச் செய்யும்போது, உங்களுக்கு நிறைய மன திருப்தி கிடைக்கும்.

அடுத்த வாரம் முதல் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படுவதற்கும், ஊர்வலங்களை அனைத்து விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது சம்பந்தமான வேண்டுகோளையும் முன்வைப்பேன் என்று அவர் கூறுகிறார். “இது ஸ்ரீபாதம் குழுவினருக்கு மட்டுமல்ல, பல சேவை வழங்குபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கோயில்களை நம்பியிருக்கிறார்கள்.”

ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து கோயில்களுக்கு பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீபாதம் மட்டுமல்ல, மலர் விற்பனையாளர்கள் மற்றும் பூஜா பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் இது ஒரு கடினமான நேரமாகும். இது சம்பந்தமாக சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க அமைச்சரின் கவனத்திற்கு இதை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம்.

செய்தி மற்றும் படங்கள் : பிரபு

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

12 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

13 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

13 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

2 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

2 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

3 days ago