மயிலாப்பூர் கோவில்களின் ஸ்ரீபாதம் ‘மேஸ்திரி’அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து கோவில் திறப்பது சம்பந்தமாக தங்கள் வேண்டுகோளை முன்வைக்க முடிவு

கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் ஊர்வலங்கள் நடத்துவதை தொகுத்து வழங்குகிறார்.

இவர் கடந்த 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் கோயில்களில் ஸ்ரீபாதமாக பணியாற்றி வருகிறார். இவரது முன்னோர்களும் பல தலைமுறைகளாக மயிலாப்பூர் கோவில்களில் உள்ள கடவுள்களை தங்கள் தோள்களில் சுமந்து இந்த சேவையை செய்து வந்தவர்கள். பெரிய உற்சவங்களின் போது மயிலாப்பூர் கோயில்களில் ‘பந்தல்’ ஏற்பாடு செய்கிறார்.

கபாலீஸ்வரர் கோயில், மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், மாரி செட்டி வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் காரணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் 60 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஸ்ரீபாதமாக சேவை செய்கிறது.

தற்போதைய ஊரடங்கின் போது கபாலீஸ்வரர் கோயில் மட்டுமே கோவில் வளாகத்திற்குள்ளேயே ஊர்வலங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்த சேவையைச் செய்யும் மற்ற எல்லா கோவில்களும் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் உற்சவத்தை கூட நிறுத்திவிட்டதாகவும் சங்கர் இன்று காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் தெருவில் வீதி உலா வரும் அனைத்து ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

அனைத்து கோயில்களிலும் இருக்கும் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய பிரச்சனைகளை மாநில அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து தெரிவிக்க சங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஊர்வலங்கள் மீதான கட்டுப்பாடுகளின் விளைவாக ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய அவலநிலையை போக்க சில தளர்வுகளை அறிவிக்க வேண்டி வரும் புதன் கிழமை அமைச்சரை சந்திக்க உள்ளதாக மேஸ்திரி தெரிவிக்கிறார். கோவிலுக்குள் சாமி ஊர்வலங்களை நடத்த அனுமதி தரவேண்டும் என்றும் அதே நேரத்தில் குறைந்த அளவிலான பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், இதனால் எங்கள் சேவைகளுக்காக சில நிதியை பெறுவோம் என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாமி ஊர்வலங்கள் நிறுத்தப்பட்டதால் எங்களது பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதை நம்பியுள்ளதாக ஸ்ரீபாதம் குழுவின் மேஸ்திரி தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இது நிதி அவலநிலை மட்டுமல்ல, “நீங்கள் இந்த சேவையைச் செய்யும்போது, உங்களுக்கு நிறைய மன திருப்தி கிடைக்கும்.

அடுத்த வாரம் முதல் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படுவதற்கும், ஊர்வலங்களை அனைத்து விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது சம்பந்தமான வேண்டுகோளையும் முன்வைப்பேன் என்று அவர் கூறுகிறார். “இது ஸ்ரீபாதம் குழுவினருக்கு மட்டுமல்ல, பல சேவை வழங்குபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கோயில்களை நம்பியிருக்கிறார்கள்.”

ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து கோயில்களுக்கு பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீபாதம் மட்டுமல்ல, மலர் விற்பனையாளர்கள் மற்றும் பூஜா பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் இது ஒரு கடினமான நேரமாகும். இது சம்பந்தமாக சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க அமைச்சரின் கவனத்திற்கு இதை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம்.

செய்தி மற்றும் படங்கள் : பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

6 days ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

6 days ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

1 week ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

2 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 weeks ago