மயிலாப்பூர் கோவில்களின் ஸ்ரீபாதம் ‘மேஸ்திரி’அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து கோவில் திறப்பது சம்பந்தமாக தங்கள் வேண்டுகோளை முன்வைக்க முடிவு

கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் ஊர்வலங்கள் நடத்துவதை தொகுத்து வழங்குகிறார்.

இவர் கடந்த 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் கோயில்களில் ஸ்ரீபாதமாக பணியாற்றி வருகிறார். இவரது முன்னோர்களும் பல தலைமுறைகளாக மயிலாப்பூர் கோவில்களில் உள்ள கடவுள்களை தங்கள் தோள்களில் சுமந்து இந்த சேவையை செய்து வந்தவர்கள். பெரிய உற்சவங்களின் போது மயிலாப்பூர் கோயில்களில் ‘பந்தல்’ ஏற்பாடு செய்கிறார்.

கபாலீஸ்வரர் கோயில், மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், மாரி செட்டி வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் காரணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் 60 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஸ்ரீபாதமாக சேவை செய்கிறது.

தற்போதைய ஊரடங்கின் போது கபாலீஸ்வரர் கோயில் மட்டுமே கோவில் வளாகத்திற்குள்ளேயே ஊர்வலங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்த சேவையைச் செய்யும் மற்ற எல்லா கோவில்களும் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் உற்சவத்தை கூட நிறுத்திவிட்டதாகவும் சங்கர் இன்று காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் தெருவில் வீதி உலா வரும் அனைத்து ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

அனைத்து கோயில்களிலும் இருக்கும் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய பிரச்சனைகளை மாநில அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து தெரிவிக்க சங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஊர்வலங்கள் மீதான கட்டுப்பாடுகளின் விளைவாக ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய அவலநிலையை போக்க சில தளர்வுகளை அறிவிக்க வேண்டி வரும் புதன் கிழமை அமைச்சரை சந்திக்க உள்ளதாக மேஸ்திரி தெரிவிக்கிறார். கோவிலுக்குள் சாமி ஊர்வலங்களை நடத்த அனுமதி தரவேண்டும் என்றும் அதே நேரத்தில் குறைந்த அளவிலான பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், இதனால் எங்கள் சேவைகளுக்காக சில நிதியை பெறுவோம் என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாமி ஊர்வலங்கள் நிறுத்தப்பட்டதால் எங்களது பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதை நம்பியுள்ளதாக ஸ்ரீபாதம் குழுவின் மேஸ்திரி தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இது நிதி அவலநிலை மட்டுமல்ல, “நீங்கள் இந்த சேவையைச் செய்யும்போது, உங்களுக்கு நிறைய மன திருப்தி கிடைக்கும்.

அடுத்த வாரம் முதல் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படுவதற்கும், ஊர்வலங்களை அனைத்து விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது சம்பந்தமான வேண்டுகோளையும் முன்வைப்பேன் என்று அவர் கூறுகிறார். “இது ஸ்ரீபாதம் குழுவினருக்கு மட்டுமல்ல, பல சேவை வழங்குபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கோயில்களை நம்பியிருக்கிறார்கள்.”

ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து கோயில்களுக்கு பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீபாதம் மட்டுமல்ல, மலர் விற்பனையாளர்கள் மற்றும் பூஜா பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் இது ஒரு கடினமான நேரமாகும். இது சம்பந்தமாக சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க அமைச்சரின் கவனத்திற்கு இதை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம்.

செய்தி மற்றும் படங்கள் : பிரபு

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

2 days ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 days ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

6 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

1 week ago