செய்திகள்

ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது.

மேலும் கடந்த சில மாதங்களாக கோவில் அலுவலக கதவு பூட்டியே கிடக்கிறது.

கோவில் அறங்காவலர் தலைவர் என்.சி.ஸ்ரீதர், கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவிலுக்காக தனது பணியை முழு நேரமாக செலவிட்டதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மயிலாப்பூர் டைம்ஸிடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் கோவிலில் ஏற்கனெவே வகித்த பதவியை மீண்டும் கையில் எடுத்து வழக்கமான நடைமுறையை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த தெப்பத் திருவிழாவை ஏற்பாடு செய்ததும் இவரே.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தனது இடைநீக்கத்தை ரத்து செய்ததை அவர் மயிலாப்பூர் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். நான்கு அறங்காவலர்களின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் சாவியை திரும்ப ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் அது மீண்டும் திறக்கப்படும். முன்பு போலவே, கோவிலில் அனைத்து திருவிழாக்கள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிர்வகிக்க உள்ளோம் என்று ஸ்ரீதர் கூறினார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

2 hours ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

2 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

2 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

3 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

3 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

4 days ago