ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது.

மேலும் கடந்த சில மாதங்களாக கோவில் அலுவலக கதவு பூட்டியே கிடக்கிறது.

கோவில் அறங்காவலர் தலைவர் என்.சி.ஸ்ரீதர், கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவிலுக்காக தனது பணியை முழு நேரமாக செலவிட்டதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மயிலாப்பூர் டைம்ஸிடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் கோவிலில் ஏற்கனெவே வகித்த பதவியை மீண்டும் கையில் எடுத்து வழக்கமான நடைமுறையை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த தெப்பத் திருவிழாவை ஏற்பாடு செய்ததும் இவரே.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தனது இடைநீக்கத்தை ரத்து செய்ததை அவர் மயிலாப்பூர் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். நான்கு அறங்காவலர்களின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் சாவியை திரும்ப ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் அது மீண்டும் திறக்கப்படும். முன்பு போலவே, கோவிலில் அனைத்து திருவிழாக்கள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிர்வகிக்க உள்ளோம் என்று ஸ்ரீதர் கூறினார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

1 day ago

கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தகடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள்.

இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…

2 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாநில அமைச்சராகப் பதவியேற்பு

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…

4 days ago

மயிலாப்பூர் புதிய சட்டமன்ற உறுப்பினர், உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய மூன்று முக்கியப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டுள்ளார்; போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைக் கையாள்வது அவற்றில் ஒன்றாகும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், TVK கட்சியைச் சேர்ந்த பி. வெங்கடராமணனின் நிகழ்ச்சி நிரலில் மூன்று பிரச்சினைகள் முதலிடம்…

1 week ago

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

4 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

4 weeks ago