செய்திகள்

ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது.

மேலும் கடந்த சில மாதங்களாக கோவில் அலுவலக கதவு பூட்டியே கிடக்கிறது.

கோவில் அறங்காவலர் தலைவர் என்.சி.ஸ்ரீதர், கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவிலுக்காக தனது பணியை முழு நேரமாக செலவிட்டதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மயிலாப்பூர் டைம்ஸிடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் கோவிலில் ஏற்கனெவே வகித்த பதவியை மீண்டும் கையில் எடுத்து வழக்கமான நடைமுறையை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த தெப்பத் திருவிழாவை ஏற்பாடு செய்ததும் இவரே.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தனது இடைநீக்கத்தை ரத்து செய்ததை அவர் மயிலாப்பூர் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். நான்கு அறங்காவலர்களின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் சாவியை திரும்ப ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் அது மீண்டும் திறக்கப்படும். முன்பு போலவே, கோவிலில் அனைத்து திருவிழாக்கள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிர்வகிக்க உள்ளோம் என்று ஸ்ரீதர் கூறினார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் தெற்கு மாடத்தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மே 14ம் தேதி துவங்கி…

1 day ago

ஞாயிற்றுக்கிழமை ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லரில் மேளா

லஸ் சர்ச் சாலையில் உள்ள ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லர் (ஸ்டேட் வங்கி எதிரில், அம்ருததாஞ்சன்) மே 19 அன்று (மதியம்…

1 day ago

பரபரப்பான மயிலாப்பூர் தெருவில் சாக்கடை மேன்ஹோல் மூடியை சுற்றியிருந்த அரைகுறை வேலைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர்.

சமூக ஊடகங்களின் ரீச் மற்றும் மாநில சிவில் ஏஜென்சிகளில் காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திற்கு நன்றி, கல்வி வாரு தெருவில் பழுதுபார்க்கப்பட்ட…

1 day ago

இந்த மந்தைவெளி சமூகம் நகரின் ஏரிகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பற்றி அறிந்து கொண்டது.

மே 10 அன்று, “லேக்ஸ் ஆன் வீல்ஸ்” கருப்பொருள் மொபைல் திட்டம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சென்று…

1 day ago

சென்னை மெட்ரோ: லஸ் சர்க்கிளைச் சுற்றியுள்ள பாதையில் பைக்குகள் செல்ல தடை.

சென்னை மெட்ரோ பணி முன்னேறி வருவதால், லஸ் வட்டத்தில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் பாதைகளில் மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. தற்போது,…

2 days ago

குழந்தைகளுக்கான பாரதிய வித்யா பவனின் இரண்டாவது பட்டறைகள். மே 20 முதல்

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வழங்குகிறது. திட்டமிடப்பட்ட திட்டங்கள்…

2 days ago