ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் தெற்கு மாடத்தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மே 14ம் தேதி துவங்கி ஜூன் 3ம் தேதி வரை நடக்கிறது.

நீண்ட கோடை வெயிலுக்குப் பிறகு, மே 16ம் தேதி காலை அதிகார நந்தி ஊர்வலம் புறப்பட்டபோது மழை பெய்தது.

விழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இல்லை என்றாலும், இங்கு நடைபெறும் தினசரி நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

வரவிருக்கும் நாட்களின் சிறப்பம்சங்கள் இதோ –
மே 18: இரவு 9 மணி – ரிஷப வாகனம் ஊர்வலம்.
மே 19: மாலை 4 மணி – 108 சங்காபிஷேகம். இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்தி வாகன ஊர்வலம் தொடங்குகிறது.
மே 20: காலை 7 மணி – தேர் ஊர்வலம்.
மே 21: பிற்பகல் 2.45 – சுக்ர பகவான் கண் பெருதல்.
மே 23 மாலை – திருக்கல்யாணம்

மே 14 முதல் 23 வரை, மூத்த கலைஞர்களின் நாகஸ்வரம் கச்சேரிகள், பெரும்பாலும் மாலை நேரங்களில் நடைபெறும்). மே 25 முதல் விடையாற்றி விழா – மாலை நேரங்களில் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் நடைபெறும்; அரித்வாரமங்கலம் ஏ கே பழனிசாமியின் நாகஸ்வரமும், நித்யஸ்ரீ மகாதேவனின் குரல் இசை கச்சேரியும் அடங்கும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago