கடற்கரையில் உள்ள மக்களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மெரினா லைட் ஹவுஸின் சுவர்களில் ஓவியம்.

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்க வளாகச் சுவர் எளிமையான, வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையோரம் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் ஓவியங்களாக இந்த சுவற்றில் வரைந்துள்ளனர்.

இந்த திட்டம் ‘கரம் கோர்போம் அறக்கட்டளை’ (KKF) என்ற தன்னார்வ அமைப்பின் திட்டமாகும், இது ‘பொது இடங்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும்’ என்ற செய்தியை ஊக்குவிக்கிறது.

கரம் கோர்போம் அறக்கட்டளையின் தலைவரான எஸ். ஷிவ்குமார் கூறுகையில், ”கடற்கரைக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால், கடற்கரையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வெவ்வேறு கதாபாத்திரங்களை சித்தரிக்கும் ‘பீப்பிள் ஆன் பீச்’ தீம் நாங்கள் பயன்படுத்தினோம். இது இன்ஸ்டன்ட் ஹிட் ஆகிவிட்டது, கிட்டத்தட்ட அந்த வழியாக செல்லும் அனைத்து மக்களும் சிறிது நேரம் நின்று இந்த ஓவியங்களை ரசிக்கிறார்கள்.

“மிகவும் முக்கியமாக, உள்ளூர் மக்கள் சுவரில் தங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். சிலர் வந்து தங்களுடைய படம் அல்லது வர்த்தகத்தை சித்தரிக்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கின்றார்.

சில தொழில் வல்லுநர்கள் மற்றும் கரம் கோர்ப்போம் கலைஞர்களால் ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், சென்னை மாநகராட்சியின் ‘நமக்கு நாமே திட்டம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

மேலும் இந்தத் திட்டத்திற்கு ஜோஹோ கார்ப்பரேஷன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து நிதியளித்தன. லைட் ஹவுஸில் பணி நியமனம், KKF இன் மிகவும் திருப்திகரமான திட்டங்களில் ஒன்றாகும் என்றும், சுற்றியுள்ள அனைவரின் பாராட்டும் எங்கள் பணியைத் தொடர ஊக்குவிக்கிறது என்றும் ஷிவ்குமார் கூறுகிறார்.

கரம் கோர்போம் அமைப்பு, திறந்தவெளிகள், விளையாட்டு மைதானங்கள், சிவில் அமைப்பால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள பொது சுவர்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துகிறது. இது தனிப்பட்ட முறையில் கமிஷன் செய்யப்பட்ட திட்டங்களையும் மேற்கொள்கிறது.

மேலும் விவரங்களுக்கு – தொலைபேசி எண் : 098840 32182
http://www.karamkorpom.org/.

புகைப்படங்கள்: கரம் கோர்போம் அறக்கட்டளை

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago