நேற்று காலை முதல் சூறாவளி காலநிலையின் போது சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றியதற்காக மயிலாப்பூர் மக்களிடமிருந்து மாநில அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். இன்றைய நாள், அவர்கள் அனைவருக்கும் கடினமாக இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் இருந்தன – வீதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை நறுக்கி வெளியேற்றுவது மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்வது போன்ற பணிகள் பெரிய சவால்களாக இருந்தது. போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வாலின் உத்தரவைப் பின்பற்றி வழக்கமான பணிகளை மேற்கோள்வது மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து வெள்ளப் பிரச்சினைகளை சரி செய்தனர். போக்குவரத்து போலீசாரும் மழையில் கூட தங்களுடைய பணியை சிறப்பாக செய்தனர். தினசரி குப்பைகளை அகற்றும் உர்பேசர் சுமித் ஊழியர்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை விரைவாக மழை நின்ற நேரத்தில் செய்து முடித்தனர். உள்ளூர் பிரிவுகளில் உள்ள TANGEDCO மற்றும் மெட்ரோவாட்டர் ஊழியர்கள் SOS அழைப்புகளை ஏற்று பிரச்சனையை சரி செய்வதற்காக தங்களுடைய பணிகளில் இருந்தனர். இன்று நண்பகலுக்குப் பிறகு சூறாவளி காற்று வலுவடைந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…