அதிக சேதம் ஏற்படுத்தாமல் கரையை கடந்தது நிவர் புயல்.

மயிலாப்பூரில் இன்றைய காலை பொழுது அமைதியான சூழ்நிலையில் காணப்பட்டது. புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவு கரையை கடந்தது நிவர் சூறாவளி. ஆனால் சென்னை நகரம் முழுவதும் பலத்த காற்று வீசியதால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்பதற்கு பலர் நன்றி தெரிவித்தனர். பல தெருக்களில் ஏராளமான இலைகள் மற்றும் கிளைகள் மற்றும் வேரோடு பிடுங்கப்பட்ட தாவரங்கள் இருந்தன, ஆனால் ஒரு சில மரங்கள் மட்டுமே அங்கும் இங்கும் பிடுங்கியெறியப்பட்டிருந்தது. மின் விநியோகம் பல இடங்களில் எவ்வித தடையுமின்றி வழங்கப்பட்டதாக பொதுமக்கள் சிலர் கூறினர். ஆனால் சில இடங்களில், காற்று வலுவாக வீச தொடங்கியபோது நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள் தங்கள் பிராட்பேண்ட் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மற்றவர்கள் ஆவின் தினசரி பால் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர். மாநகராட்சி பணியாளர்கள் விழுந்த மரக் கிளைகளை அகற்றுவது அல்லது போக்குவரத்தைத் தடுக்கும் மரங்களை வெட்டி அகற்றியதை காணமுடிந்தது. மெரினாவில் லூப் சாலை வரை காற்று மணலை வீசியது. இங்குள்ள படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அதிக அளவு மணலால் மூடப்பட்டிருந்தன. கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது.

admin

Recent Posts

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

4 days ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

4 days ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

3 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

4 weeks ago