மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து விசாலாட்சி தோட்டம், வண்ணியம்பதி, ஜெத் நகர் போன்ற பகுதிகளில் நடைபயணமாக சென்று, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த மாநகராட்சி பள்ளி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 105 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை வருடாவருடம் குறைந்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணங்களாக குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசித்து வந்த மக்களை வேறொரு பகுதிக்கு அரசு இடமாற்றம் செய்ததாலும் மற்றும் பழைய குடியிருப்பு பகுதிகளை இடித்து புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதால் இங்கு வசித்து வந்த குடும்பங்கள் வேறொரு பகுதிகளில் வசித்து வருவதால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக பள்ளியின் முதல்வர் பால்ராஜ் தெரிவிக்கிறார். இந்த பள்ளியில் ஆங்கிலவழி கல்வியும் தமிழ்வழி கல்வியும் உள்ளது. இப்பள்ளியில் ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களுக்கு பள்ளியின் முதல்வர் பால்ராஜை 7402133337 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…