செய்திகள்

தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார் டாக்டர் சி.சைலேந்திர பாபு

டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி கலந்து கொண்டு புதிய இயக்குனராக பதவியேற்கவுள்ள சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவரிடம் அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜே.கே திரிபாதியின் மனைவியும் கலந்துகொண்டார். பதவியேற்பிற்கு பின் ஓய்வு பெற்ற தலைமை இயக்குனர் திரிபாதியையும் அவருடைய மனைவியையும் அலங்கரிக்கப்பட்ட காரில் அமரவைத்து காவல்துறை தலைமை அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். இது ஒரு வழக்கமான நிகழ்வு.

கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அலுவலகம். கடந்த இருபது வருடங்களுக்கு முன் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடங்களை இடிக்கக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததால் இந்த கட்டிடத்தை இடிக்காமல் அரசு தற்போதுவரை பயன்படுத்தி வருகிறது.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

13 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago