Categories: ருசி

பெயர் பலகை இல்லை, விளம்பரம் இல்லை. ஆனால் கச்சேரி சாலையில் உள்ள இந்த கடையின் உணவு வேகமாக விற்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில் கச்சேரி சாலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கடை கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. வெஜிடபிள் ரைஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம், கேரட் சாதம், தேங்காய் சாதம், பொதினா சாதம் போன்ற சாத வகைகளை பார்சல் செய்து விற்கின்றனர். ஒரு பார்சல் விலை ரூ.40.

இந்த உணவகம் கடந்த வருடம் கூட நடைபெற்றதாகவும். ஆனால் தற்போது மதிய உணவு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் நூறு பொட்டலங்கள் விற்பதாகவும் இந்த கடையின் முதலாளி தெரிவிக்கிறார். இது தவிர இவர்கள் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் எடுத்து செய்து தருவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் இவர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 97109 34733

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago