மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது.
நடன குரு ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது நடனக் கலைஞர்கள் ‘கோதா’ நடன நிகழ்ச்சியை வழங்கினர். நடன நிகழ்ச்சி நடைபெற்ற ஆடிட்டோரியத்தில் இருந்த பெரும்பாலானோர் குரு ஊர்மிளாவின் அகாடமியில் நடனம் கற்கும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள். முன்னதாக நடனக் கலைஞர் கயல்விழி கபிலனின் சோலோ பரதநாட்டியம் நடந்தது.
துவக்க விழாவில் அப்பல்லோ மருத்துவமனையின் ப்ரீத்தா ரெட்டி மற்றும் நடன குரு பத்மா சுப்ரமணியம், நல்லி குப்புசாமி மற்றும் என். ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கே.என்.ராமசுவாமி, இந்த நாட்டிய திருவிழா (டிச.26 வரை நடைபெறும்) வாரநாட்களில் இரண்டு நடன நிகழ்ச்சிகளும், வார இறுதி நாட்களில் மூன்று நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும், நடன நிகழ்ச்சியை கண்டுரசிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு என்று தெரிவித்தார். மேலும் நாட்டிய நாடன நிகழ்ச்சிகள் www.chennaibhavans.org என்ற வலைதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…