மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது.
நடன குரு ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது நடனக் கலைஞர்கள் ‘கோதா’ நடன நிகழ்ச்சியை வழங்கினர். நடன நிகழ்ச்சி நடைபெற்ற ஆடிட்டோரியத்தில் இருந்த பெரும்பாலானோர் குரு ஊர்மிளாவின் அகாடமியில் நடனம் கற்கும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள். முன்னதாக நடனக் கலைஞர் கயல்விழி கபிலனின் சோலோ பரதநாட்டியம் நடந்தது.
துவக்க விழாவில் அப்பல்லோ மருத்துவமனையின் ப்ரீத்தா ரெட்டி மற்றும் நடன குரு பத்மா சுப்ரமணியம், நல்லி குப்புசாமி மற்றும் என். ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கே.என்.ராமசுவாமி, இந்த நாட்டிய திருவிழா (டிச.26 வரை நடைபெறும்) வாரநாட்களில் இரண்டு நடன நிகழ்ச்சிகளும், வார இறுதி நாட்களில் மூன்று நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும், நடன நிகழ்ச்சியை கண்டுரசிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு என்று தெரிவித்தார். மேலும் நாட்டிய நாடன நிகழ்ச்சிகள் www.chennaibhavans.org என்ற வலைதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…