மயிலாப்பூர் மாடவீதிகளில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஊர்வலம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது .

அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால், பெரும்பாலான மக்களுக்கு மாடவீதியில் ஊர்வலம் நடக்கும் என்று தெரியவில்லை. கடந்த ஒன்பது மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் முடிந்த பிறகு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமிக்கு கோவிலின் மண்டபத்தில் இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது.

ஞாயிற்றுகிழமை காலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாடவீதியில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புகைப்படம்: எஸ்.பிரபு, மற்றும் மதன்

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago