Categories: சமூகம்

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ தயாராகி வரும் இளைஞர்கள் குழு

சாந்தோம் தேவாலயத்தின் பாதிரியார் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து சென்னை நகரில் உள்ள வெவ்வேறு தேவாலயங்களில் இந்த கொரோனா தொற்று நேரத்தில் மக்களுக்கு சேவை செய்ய குழுவை உருவாக்கி வருகின்றனர். மூன்று குழுக்களை உருவாக்கி வருகின்றனர். இவர்களுடைய நிர்வாக தலைமையகம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் மையத்தில் அமைய உள்ளது. ஒரு குழு மக்களுக்கு தேவையான தடுப்பூசி செலுத்தும் இடங்கள், படுக்கை வசதிகள் இருக்கும் மருத்துவமனை விவரங்கள், போன்ற செய்திகள் வழங்கவும், இரண்டாவது குழு மருந்து மற்றும் உணவு தேவைக்காகவும், மூன்றாவது குழு கொரோனவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்கள் குழுவுக்கு பாதிரியார் ரொனால்டு ரிச்சர்டு ஏற்ற தலைவர். தற்போது பேராயர், ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி இந்த திட்டங்களை பார்வையிட்டு வருகிறார். திட்டவேளைகள் முடிந்த பிறகு முழு வீச்சில் இந்த இளைஞர்கள் குழு செயல்பட துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

14 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

2 days ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

3 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

3 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

6 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago