சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தவர்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவிந்தசுவாமி நகர் (ஆர்.ஏ.புரம் மண்டலம்) பகுதியில் வசிப்பவர்கள், மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இங்கிருந்து ஏற்கனெவே வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் (சிலர் ஏற்கனவே பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்) மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் புதிய குடியிருப்புத் கட்டிடங்களில் தங்கலாம்.
திங்களன்று, நகரில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலைய வளாகத்திற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் நீண்ட, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் தீக்குளித்து பின்னர் இறந்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நகரில் வசிப்பதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்; அவர்களை தொலைதூர வளாகங்களுக்கு மாற்றுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் படிப்பு மோசமாக பாதிக்கப்படும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…