ஆர்.ஏ.புரம் மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு மயிலாப்பூரில் தங்கும் இடம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தவர்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவிந்தசுவாமி நகர் (ஆர்.ஏ.புரம் மண்டலம்) பகுதியில் வசிப்பவர்கள், மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இங்கிருந்து ஏற்கனெவே வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் (சிலர் ஏற்கனவே பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்) மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் புதிய குடியிருப்புத் கட்டிடங்களில் தங்கலாம்.

திங்களன்று, நகரில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலைய வளாகத்திற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் நீண்ட, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் தீக்குளித்து பின்னர் இறந்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நகரில் வசிப்பதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்; அவர்களை தொலைதூர வளாகங்களுக்கு மாற்றுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் படிப்பு மோசமாக பாதிக்கப்படும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago