மயிலாப்பூர் தம்பதியர் கொலை வழக்கு: கொலை செய்ய பேட் மற்றும் கத்தியை பயன்படுத்திய கொலையாளிகள்

மயிலாப்பூர், துவாரகா காலனியில் சனிக்கிழமை காலை தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் போலீசார், கொலை செய்யப்பட்டவர்களது இல்லத்தில், அவர்களது ஓட்டுநர் மற்றும் வீட்டு உதவியாளர் கிரிக்கெட் பேட் மற்றும் கத்தியை பயன்படுத்தி தம்பதியை கொன்றுள்ளதாக கூறுகிறார்கள்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவர்களது பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்ட தம்பதியின் உடல்களை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், இறந்த தம்பதியினரை தங்கள் காரில் பண்ணைக்கு வீட்டுக்கு கொண்டு சென்று, அங்கு முன்பே ஒரு குழி தோண்டப்பட்டு அதில் சடலங்களை புதைத்துள்ளதால், இந்த கொலையை அவர்கள் திட்டமிட்டே செய்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

பாடி – ஆந்திரா நெடுஞ்சாலை வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து தரவுகளைப் பயன்படுத்தி நகர போலீஸார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்த பின்னர், கொலையாளிகளை போலீசார் ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோலில் கைது செய்துள்ளனர்.

புகைப்படம் : கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படம்

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago