ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்.ஏ புரத்தில் 7வது சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் அலுவலக வாயிலில் நடைபெற உள்ளது.
இதில் பங்கு பெற அனுமதி இலவசம்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரி ஒருவர் மக்கள் அவரவர் வீட்டின் மாடிகளில் எவ்வாறு மாடித்தோட்டங்கள் அமைக்கலாம் என்று விவரித்து பேசவுள்ளார். மேலும் இங்கு மாடித்தோட்டம் அமைக்க தேவையான விதை, தொட்டிகள், உரங்கள், போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் வழங்க உள்ளனர். நீங்கள் இந்த சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் பெற விரும்பினால் உங்களுடைய ஆதார் கார்டு நகலையும் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் வழங்க வேண்டும்.
நீங்கள் இந்த மாடித்தோட்ட வகுப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் திருமதி. ராதிகாவை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9790899758
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…