மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் தற்போது வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.

சமீபத்தில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் வண்ணம் தீட்டி அதே நேரத்தில் மிகவும் பிரபலமான கார்ட்டூன் படங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் எதற்க்காக வைத்துள்ளனர் என்றால், இந்த காவல் நிலையம் தற்போது மகளிர் சம்பந்தமான வழக்குகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவ வழக்குகளையும் கையாளுகின்றனர். எனவே குழந்தைகள் இங்கு வரும் போது அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கி ஒரு நல்ல எண்ணத்தையும் தைரியத்தையும் உருவாக்கும் விதத்தில் இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago