ஆர்.ஏ. புரத்தில் வீட்டு மாடிகளில் மாடித்தோட்டம் அமைப்பது சம்பந்தமான பயிற்சி வகுப்பு

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்.ஏ புரத்தில் 7வது சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் அலுவலக வாயிலில் நடைபெற உள்ளது.

இதில் பங்கு பெற அனுமதி இலவசம்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரி ஒருவர் மக்கள் அவரவர் வீட்டின் மாடிகளில் எவ்வாறு மாடித்தோட்டங்கள் அமைக்கலாம் என்று விவரித்து பேசவுள்ளார். மேலும் இங்கு மாடித்தோட்டம் அமைக்க தேவையான விதை, தொட்டிகள், உரங்கள், போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் வழங்க உள்ளனர். நீங்கள் இந்த சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் பெற விரும்பினால் உங்களுடைய ஆதார் கார்டு நகலையும் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் வழங்க வேண்டும்.

நீங்கள் இந்த மாடித்தோட்ட வகுப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் திருமதி. ராதிகாவை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9790899758

Verified by ExactMetrics