உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறுகையில், மகா பெரியவா சந்நிதிக்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஒரு நல்ல இடம் கடந்த நான்கு மாதங்களாக தேடப்பட்டது, கடைசியாக பிச்சுப்பிள்ளை தெருவில், மாமி டிஃபெனுக்கு எதிரே உள்ள இரண்டு மாடி குடியிருப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறினார்.
இந்த இடத்தின் அளவு ஒரு கிரவுண்ட். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெற்குப் பக்கமாக பிச்சு பிள்ளை தெருவின் எண். 4 இல் அமைந்துள்ளது. கட்டிடம், மறுவடிவமைப்பு மற்றும் மாற்றம் உள்ளிட்ட செலவுகள் சுமார் ரூ. 10 கோடி. சொத்து உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை வாங்க வேண்டி இருப்பதால் ஒரு வருடம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களுக்கு முழு கட்டணத்தையும் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் சந்நிதி இந்த வீட்டின் தரைத்தளத்தில் வரும் என்றார். ஒத்த கருத்தை கொண்ட பக்தர்களிடம் இருந்து முழுப் பணமும் வசூலிக்கப்பட்டதும், சந்நிதியின் மறுவடிவமைப்பு குறித்த மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களை அறக்கட்டளை இறுதி செய்யும்.
மயிலாப்பூர் ஒரு புண்ணிய ஸ்தலம் என்பதாலும், மஹா பெரியவா இத்தலத்தில் அருளியிருப்பதாலும், நான்கு மாட வீதிகளுக்குள்ளேயே மத ஊர்வலங்களை நடத்துவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கணேஷ் சர்மா கூறினார்.
இந்த அறக்கட்டளை மாதாந்திர அனுஷம் மற்றும் வருடாந்திர ஜெயந்தி ஹோமங்கள், பதுகா பூஜை, வேதபாராயணம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துகிறது. அனைத்தும் மஹா பெரியவாவின் பெயரில்.
செய்தி : எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…