உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறுகையில், மகா பெரியவா சந்நிதிக்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஒரு நல்ல இடம் கடந்த நான்கு மாதங்களாக தேடப்பட்டது, கடைசியாக பிச்சுப்பிள்ளை தெருவில், மாமி டிஃபெனுக்கு எதிரே உள்ள இரண்டு மாடி குடியிருப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறினார்.
இந்த இடத்தின் அளவு ஒரு கிரவுண்ட். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெற்குப் பக்கமாக பிச்சு பிள்ளை தெருவின் எண். 4 இல் அமைந்துள்ளது. கட்டிடம், மறுவடிவமைப்பு மற்றும் மாற்றம் உள்ளிட்ட செலவுகள் சுமார் ரூ. 10 கோடி. சொத்து உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை வாங்க வேண்டி இருப்பதால் ஒரு வருடம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களுக்கு முழு கட்டணத்தையும் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் சந்நிதி இந்த வீட்டின் தரைத்தளத்தில் வரும் என்றார். ஒத்த கருத்தை கொண்ட பக்தர்களிடம் இருந்து முழுப் பணமும் வசூலிக்கப்பட்டதும், சந்நிதியின் மறுவடிவமைப்பு குறித்த மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களை அறக்கட்டளை இறுதி செய்யும்.
மயிலாப்பூர் ஒரு புண்ணிய ஸ்தலம் என்பதாலும், மஹா பெரியவா இத்தலத்தில் அருளியிருப்பதாலும், நான்கு மாட வீதிகளுக்குள்ளேயே மத ஊர்வலங்களை நடத்துவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கணேஷ் சர்மா கூறினார்.
இந்த அறக்கட்டளை மாதாந்திர அனுஷம் மற்றும் வருடாந்திர ஜெயந்தி ஹோமங்கள், பதுகா பூஜை, வேதபாராயணம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துகிறது. அனைத்தும் மஹா பெரியவாவின் பெயரில்.
செய்தி : எஸ்.பிரபு
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…