மயிலாப்பூர் சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியிலுள்ள பாரதிய வித்யா பவன் இசை விழாவை தொடங்கினர். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பாரதிய வித்யா பவனின் இசை விழாவில் பத்து நாட்களுக்கு தினமும் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இரண்டு கச்சேரிகள் நடைபெறும். பிரபலம் வாய்ந்த கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக காலை பத்துமணிக்கு கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரிகளில் பங்கேற்க அனுமதி இலவசம். கச்சேரிகளை காண வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பாரதிய வித்யா பவன் இசை விழா 2021

 

பாரதிய வித்யா பவன் இசை விழா 2021

கடந்த சனிக்கிழமை மயிலாப்பூரிலுள்ள கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா அவர்களின் வருடாந்திர இசை விழாவை தொடங்கினர். ஆனால் இந்த விழா தி.நகரிலுள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நான்கு மூத்த இசை கலைஞர்களுக்கு சுதாராணி ரகுபதி (பரதநாட்டிய குரு), எஸ்.சுந்தர்(மூத்த வாய்ப்பட்டு கலைஞர்), சாக்யசேணி சாட்டர்ஜி (பரதநாட்டிய கலைஞர்), சந்தீப் நாராயணன் (வாய்ப்பட்டு கலைஞர்) இவர்கள் தவிர ஆர்.ஆர். சபாவின் செயலாளர் ஆர்.நாகராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் கூட கடந்த வருடம் போன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தங்களுடைய இசை விழா கச்சேரிகளை ஆன்லைனில் வெளியிடுகின்றனர். இந்த கச்சேரிகள் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மேலும் கச்சேரிகளை ஆன்லைனில் காண விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி கச்சேரிகளை காண வேண்டும். இந்த ஆன்லைன் கச்சேரிகள் அனைத்தும் டிசம்பர் 1ம் தேதி முதல் வெளியிடப்படவுள்ளது.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் இசை விழா 2021

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago