மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியிலுள்ள பாரதிய வித்யா பவன் இசை விழாவை தொடங்கினர். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பாரதிய வித்யா பவனின் இசை விழாவில் பத்து நாட்களுக்கு தினமும் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இரண்டு கச்சேரிகள் நடைபெறும். பிரபலம் வாய்ந்த கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக காலை பத்துமணிக்கு கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரிகளில் பங்கேற்க அனுமதி இலவசம். கச்சேரிகளை காண வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கடந்த சனிக்கிழமை மயிலாப்பூரிலுள்ள கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா அவர்களின் வருடாந்திர இசை விழாவை தொடங்கினர். ஆனால் இந்த விழா தி.நகரிலுள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நான்கு மூத்த இசை கலைஞர்களுக்கு சுதாராணி ரகுபதி (பரதநாட்டிய குரு), எஸ்.சுந்தர்(மூத்த வாய்ப்பட்டு கலைஞர்), சாக்யசேணி சாட்டர்ஜி (பரதநாட்டிய கலைஞர்), சந்தீப் நாராயணன் (வாய்ப்பட்டு கலைஞர்) இவர்கள் தவிர ஆர்.ஆர். சபாவின் செயலாளர் ஆர்.நாகராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது.
ஆனால் இந்த வருடம் கூட கடந்த வருடம் போன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தங்களுடைய இசை விழா கச்சேரிகளை ஆன்லைனில் வெளியிடுகின்றனர். இந்த கச்சேரிகள் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மேலும் கச்சேரிகளை ஆன்லைனில் காண விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி கச்சேரிகளை காண வேண்டும். இந்த ஆன்லைன் கச்சேரிகள் அனைத்தும் டிசம்பர் 1ம் தேதி முதல் வெளியிடப்படவுள்ளது.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…