மயிலாப்பூர் சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியிலுள்ள பாரதிய வித்யா பவன் இசை விழாவை தொடங்கினர். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பாரதிய வித்யா பவனின் இசை விழாவில் பத்து நாட்களுக்கு தினமும் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இரண்டு கச்சேரிகள் நடைபெறும். பிரபலம் வாய்ந்த கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக காலை பத்துமணிக்கு கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரிகளில் பங்கேற்க அனுமதி இலவசம். கச்சேரிகளை காண வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பாரதிய வித்யா பவன் இசை விழா 2021

 

பாரதிய வித்யா பவன் இசை விழா 2021

கடந்த சனிக்கிழமை மயிலாப்பூரிலுள்ள கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா அவர்களின் வருடாந்திர இசை விழாவை தொடங்கினர். ஆனால் இந்த விழா தி.நகரிலுள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நான்கு மூத்த இசை கலைஞர்களுக்கு சுதாராணி ரகுபதி (பரதநாட்டிய குரு), எஸ்.சுந்தர்(மூத்த வாய்ப்பட்டு கலைஞர்), சாக்யசேணி சாட்டர்ஜி (பரதநாட்டிய கலைஞர்), சந்தீப் நாராயணன் (வாய்ப்பட்டு கலைஞர்) இவர்கள் தவிர ஆர்.ஆர். சபாவின் செயலாளர் ஆர்.நாகராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் கூட கடந்த வருடம் போன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தங்களுடைய இசை விழா கச்சேரிகளை ஆன்லைனில் வெளியிடுகின்றனர். இந்த கச்சேரிகள் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மேலும் கச்சேரிகளை ஆன்லைனில் காண விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி கச்சேரிகளை காண வேண்டும். இந்த ஆன்லைன் கச்சேரிகள் அனைத்தும் டிசம்பர் 1ம் தேதி முதல் வெளியிடப்படவுள்ளது.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் இசை விழா 2021

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago