டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையின் நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் மோசமான நாட்களை சந்தித்து வருகிறது.

மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு பிரசவத்திற்கு தினமும் சுமார் எண்பது நபர்கள் வரை வருவர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தினமும் சுமார் எட்டு முதல் ஒன்பது நபர்களே மருத்துவம் பார்க்க வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் ஏற்படுத்தபட்டது.

கொரோனா காரணமாக இதன் திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட பிரபலமான மருத்துவமனை தற்போது கொரோனா காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago