மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு பிரசவத்திற்கு தினமும் சுமார் எண்பது நபர்கள் வரை வருவர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தினமும் சுமார் எட்டு முதல் ஒன்பது நபர்களே மருத்துவம் பார்க்க வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் ஏற்படுத்தபட்டது.
கொரோனா காரணமாக இதன் திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட பிரபலமான மருத்துவமனை தற்போது கொரோனா காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…