Categories: சமூகம்

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றனர். காலனி பகுதிகளிலும் அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டோருக்கே பெரும்பாலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளனர். ஆனால் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக சீனிவாசபுரத்தில் கடந்த ஆறு மாதங்களில் இங்கு வசித்து வரும் மக்களில் சுமார் ஐம்பது நபர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

மேலும் தடுப்பூசி போடுவதில் இங்கு வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கி தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். இது பற்றி மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கேட்ட போது இது ஒரு சவாலான காரியம் என்று கூறினார். இந்த பகுதிகளில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் இங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சியினர் யாரும் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் காய்கறி வண்டிகள் வரும் போது மக்கள் நெருக்கமாக சென்று காய்கறி வாங்குகின்றனர். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கோவிட் கேர் பணியாளர்கள் மக்களிடம் அறிவுறுத்தினால் இங்குள்ள அரசியல் கட்சியினர் இந்த வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசும், அரசியல் கட்சியினரும் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago